प्रत्याहारो ऽपि करणभूमिम् एव सातिशयां कुर्यात् ध्यानधारणासमाधयो ऽपि यथोत्तरम् अभ्यासक्रमेण निर्वर्त्यमाना ध्येयवस्तुतादात्म्यं ध्यातुः वितरेयुः
Transliteration (IAST)
pratyāhāro 'pi karaṇabhūmim eva sātiśayāṃ kuryāt dhyānadhāraṇāsamādhayo 'pi yathottaram abhyāsakrameṇa nirvartyamānā dhyeyavastutādātmyaṃ dhyātuḥ vitareyuḥ
பிரத்யாஹாரமும்கூட கரண பூமியை (இந்திரியங்களின் களத்தை) மேலும் சிறப்புடையதாக்குமே தவிர வேறன்று. தியானம், தாரணை, சமாதி இவையும் வரிசையாக மேன்மேலும் அப்யாச கிரமத்தினால் (பயிற்சி முறையினால்) நிறைவேற்றப்படும்போது, தியானிப்பவனுக்குத் தியேயமான பொருளுடன் (தியானிக்கத்தக்க பொருளுடன்) ஒன்றுபடுதலையே வழங்கவல்லன.